Thursday, 13 November 2014

கருணை தெய்வம்

ப்ரியம் கனிந்த பார்வைகளிலும்

பாசம் பிடிக்கும் வருடல்களிலும்

அன்பு குழைந்த பற்றுதல்களிலும்

அமைதி தழுவும் பேச்சிலும்

தன்னலம் கருதா எளிமையிலும்

எதிர் வரும் மனிதர்களிடமிருந்து
எதிர்பாரமல் வரும்
புன்னகைகனிந்த பணிவு நேசங்களிலும்....

ஓடிப் போய் ஒய்யாரத் தாய்மையாய்
சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறது

ஆலயந்தோறும்..
நாம் கல்வடித்து வழிபடும்.....
கருணை தெய்வ நேசங்கள்!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..