Saturday 29 November 2014

அன்னை துதி

அன்பு நிறை அகப்பொருளே
அமைதிநிறை அணுப் பொருளே

கருணைநிறை கருப்பொருளே
கனிவுநிறை கவிப் பொருளே

மணம்நிறை மலர் பொருளே
மனம்நிறை மகிழ் பொருளே

தவம்நிறை தலப் பொருளே
தனம்நிறை தனிப் பொருளே

உயிர்நிறை உறைபொருளாய்
அன்னையென வந்த தனிப்பெரும்
யோகவேள்வியே.......

சரணம் சரணம் பரிபூரண சரணம் பரமமே.....

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே...!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..