Thursday, 13 November 2014

என் கதிர் அவனே !!



என் கதிர் அவனே

குருதி புயல் ஆசை நிறைத்து

உன் வானமெங்கும் சிவந்து

மன்மத முகமெடுத்து

என்கடலில் அடைகலம் நாடும்

ஒருநாளின் இருசரிபாதி மணித்துளிகளில்

நீ நெருங்கும் நேரத்தை விட

உயரமிருக்கும் தூரத்திலேயே

மேலுதடு வேர்க்க பதட்ட புகை கிளப்பி

எழுப்பிவிடுகிறாயடா

பாச ஆசை கிளம்பும் என் பச்சை நரம்புகளை.........

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..