எங்கள் வீட்டு இறைப் பிரியம்.........ஹன்சிதா
குளிக்குமிடம் போய் நீயே தண்ணீர் அள்ளி மேல் ஊற்றுகிறாய்
சீப்பு எடுத்து சீவிய தலை கலைத்து விட்டுக் கொள்கிறாய்
மைஎடுத்து சிங்காரிக்கச் சொல்கிறாய்
நீயே போய் எடுத்தும் வருகிறாய் உனக்கான ஆடையை
உனக்கான அணிகலன்களை
எல்லாம் அணிவித்த பிறகும் போய் சரியும் பார்க்கிறாய்
கண்ணாடிமுன் நின்று
மொழியில்லா செய்கைகளில்
எனக்கான உடைகளையும் எடுத்துக் கொடுத்து என்னையும் எழுப்புகிறாய் ..
வா போகலாம் என்று.......
யாரடி செல்லம் உனக்கு கற்றுக் கொடுத்தது.......
இப்படி பக்குவமாடி என் பிரியம் களவாட
தத்தி தத்தி ஒரு சொல் பிரித்தெடுத்து
உனக்கென தமிழதிகாரம் படைக்கும்......
தங்கமயிலென வந்த செல்வமே......
உன்னை திருஷ்டி அப்ப வந்த வினைகளும் .......
உன் கனிவு கொஞ்சல் முன் கொஞ்சம் விளையாடித் தான் போகுமடி...என் அழகு தெய்வதேவதையே....
குளிக்குமிடம் போய் நீயே தண்ணீர் அள்ளி மேல் ஊற்றுகிறாய்
சீப்பு எடுத்து சீவிய தலை கலைத்து விட்டுக் கொள்கிறாய்
மைஎடுத்து சிங்காரிக்கச் சொல்கிறாய்
நீயே போய் எடுத்தும் வருகிறாய் உனக்கான ஆடையை
உனக்கான அணிகலன்களை
எல்லாம் அணிவித்த பிறகும் போய் சரியும் பார்க்கிறாய்
கண்ணாடிமுன் நின்று
மொழியில்லா செய்கைகளில்
எனக்கான உடைகளையும் எடுத்துக் கொடுத்து என்னையும் எழுப்புகிறாய் ..
வா போகலாம் என்று.......
யாரடி செல்லம் உனக்கு கற்றுக் கொடுத்தது.......
இப்படி பக்குவமாடி என் பிரியம் களவாட
தத்தி தத்தி ஒரு சொல் பிரித்தெடுத்து
உனக்கென தமிழதிகாரம் படைக்கும்......
தங்கமயிலென வந்த செல்வமே......
உன்னை திருஷ்டி அப்ப வந்த வினைகளும் .......
உன் கனிவு கொஞ்சல் முன் கொஞ்சம் விளையாடித் தான் போகுமடி...என் அழகு தெய்வதேவதையே....

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..