Thursday, 13 November 2014

என் சுவாசக் காற்றே



கையோடு கை மடியோடு தலை

நெற்றியோடு இதழ் இதழோடு இருவிரல்

உணர்வெடுத்து மென் மொழி பேச

உள்மூச்சு..உன் உள் வழிகாட்ட

இதயம் தேடி இமை பொருத்தி உதிரப் பிசுபிசுப்பாய்

உனை நேசம் வாசித்து

வாழ்ந்து சாகவேண்டுமடி

என் சுவாசக் காற்றே



No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..