Friday, 14 November 2014

தோழமைப் ப்ரியம்


தோழமைப்பிரியங்களை பண்புடனும்
மரியாதையுடனும் வழங்கி
நட்பாடும் அருமைத்தோழமை திரு Jubilee Natarajan
அவர்களின் துணைவியார் திருமதி தனலக்ஷ்மி அம்மாவிற்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

இமைக்கும் சூரியன் கண்திறந்து
கடமைசெய்யும் முன் எழுந்து

கணவன் முதல் குழந்தைகள்வரை
அனைவர் தேவையும் உணர்ந்து,....
கேட்காமலே பூர்த்தி செய்து

தனக்கென எந்த நலமும் பேணாது
மண்ணில் வாழும் மாதரசிகளுக்கு
ஓர் மகத்துவ அடையாளம் தாங்கள்

ஆணின் அமைதியில்..நிம்மதியில்
சந்தோஷத்தில் மட்டுமில்லை
தன் செயல் சுதந்திரமாய்
செயல்பட்டு
தான் என்றுஆளுமைத்திமிராய்
தலைநிமிர்ந்து கர்வம் நடக்கும் நடைக்கு...
அவர் தம் வெற்றி பாராட்டும் முதல் ஆக்க சக்தி மனைவி

அத்தகைய ஆக்க சக்தியாய்....
எங்கள் சாரின் வாழ்வு வந்து கரம் கோர்த்து கருத்திணைந்து
அவர்தம் இதய சிம்மாசனமிடும் தாங்கள்

என்றும் என்றென்றும்
மங்கலச்சின்னங்கள் கோடி பெற்று
மனநிறை சந்தோஷங்களுடன்
மகிழம்பூ மகிழ்ச்சி சூடி.....
பேரம்பேத்தி செல்வங்களுடன்
கனகாபிஷேகம் கண்டு......

தேவாதி தேவர்கள் வாழ்த்தி தேவஷேமம் பெற்று வாழ
என் அன்னை வேண்டி வாழ்த்துக்கிறேன்

இனிய வாழ்த்துக்கள் அம்மா!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..