Friday, 14 November 2014

ஏகாந்தம் இனிமை

பெருமூச்செடுத்து
ஆழ்ந்து சுவாசித்து

உள்செல்லும் மூச்சு வழி
மெல்ல உள் நுழைந்து

அணுஅணுவாய்
என்னை நான் உணர்ந்து

குறைநிறையோட
புரட்டி ஆராய்ந்து
புதினமாய் ..புது தூரிகையெடுத்து

ரசித்து ரசித்து
இமை இதழ்வரைய...

எதிர்கொள்ளும் தனிமைதான்
எத்தனை ஏகாந்த சுகம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..