Friday, 14 November 2014

குழந்தைகள் தின நாள்


தெய்வங்களின் திருநாள்...தேவ மகன் பிறந்தநாள்


பண்டித பெருமகன்....சுதந்திர இந்தியாவின் முதல் தலைமகன்

விடுதலைச்சிற்பி அவதரித்த திருநாள்
குழந்தைஅவதாரக் கடவுள்களின் திருவிழாநாள்

வேற்றுமையில் ஒற்றுமைகண்ட
வேள்வி திருநாட்டில் ....

ஒளிவிளக்காய் உதித்தெழுந்த உச்சிச்சூரியன் நீர்

போர் கண்டாய் போராட்டம் கண்டாய்
வறுமையெனும் சொல்லை கனவில்கூட அறியா கலைமகனாய்....வெள்ளிக்கிளிஞ்சலில் அன்னப்பால் உண்டநீர்
அடிபட்டு சிறைசென்றாய்....

முள்மெத்தை பஞ்சாகி..சிரித்தே சீர்சிறப்பாய் போராடி
விடுதலையெனும் ஏகாந்தம் வாங்கித் தந்தாய்..என் ஏழைஅடிமைக்குடிக்கு

எந்த ஜாதி ,...எந்த மொழி....எந்த மதம் ஆயினும்
இந்தியனும் எனும் உணர்வெழுந்த பாரத்தாய் மக்களாகிய
எங்கள் அனைவருக்கும்...

ஒரு பூமி..ஒரு சூரியன் போல்

ஒரே தாத்தா...எங்கள் பாபுஜி...மகாத்மா....
ஒரே மாமா...எங்கள் மாமா..நேருஜி

வெள்ளைக்குல்லா தலை வேரூன்ற
சிவப்புரோஜா சட்டை முளைத்த நாயகனே

மழலை மனம் கொண்டு எதிரியும் நேசிக்கும் தேவனே
விவேக சிம்மமாய் சிம்மாசனம் அமர்ந்த விடுதலை பிரம்மனே

குழந்தைகளின் மீது பேரன்பு கொண்ட சாச்சாவே

நல்லெண்ண விதைகள் வேரூன்ற தான் பிறந்தநாளை
குழந்தைதினமாய் குதுகலாமாடி....

வாழும் நாள் வரை...மழலைகள் சூழ வலம் வந்த
சரித்திர சாட்சியமே

என் திருநாட்டில் எங்கோ ஓர் குக்கிராமத்தில்
பிறந்த..பிறக்கபோகும் குழந்தைக்கும் ..பிரிய தாய்மாமாவாய்
உறவுசூடி...வீரம் சொல்லிவிளையாடும் தோழமை நீர்

கல்விஆலயத்தில் உன் நாளில்வலம் வருவர்...
உன் ஆடை..உன் வடிவு சூடிய...உன் ஆசை.ரோஜா சூடிய உம் பரமாத்மாக்கள்

கனியும் மழலையாய்...கனியா வயதுகண்டு
பிள்ளைப்பருவத்துடனே

எதுவுமறியாமல்..எதுவும் தெரியாமல்
கள்ளமில்லா மனதுடன்...பிஞ்சு நடைபோட்டு
தாய்மடிகொஞ்சிதுயின்று

சாரல்தூறும் பிரியங்களுடன்....
உன் ஆசிபெற்று வளரட்டும் இங்கு தலைமுறைகள்

வானிறங்கி வந்து வளரும் குருத்துகள் தொட்டுத்தடவி மகிழ்ந்து வாழ்த்தி வரம் வழங்கிச்செல்ல வாருங்கள்

எங்கள் வம்ச தலைமகனே............

குழந்தைமனப் பிரியங்களுக்கு
இனிய திருவிழாநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..