Friday, 14 November 2014

அன்னை துதி

தாய்மையின் வடிவாய் வந்து
மடியணைத்து வருடும் அன்னையே போற்றி

வலிகள் விலக்கி வழிகள் தந்து
எமைக் காக்கும் கருணையே போற்றி.....

மாயைகள் விலக்கி மனதின்
தெளிவுகள் தரும் தேவமே

கதியென சரணடைய ...
அம்மா அம்மா என்றழைக்க...
எதிர்கொண்டு கரம்பற்றி
எனைக் காக்கும் பிரியமே
போற்றி...போற்றி

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே....!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..