பொன்னென்று கொஞ்சவா
பொன்கழஞ்சென்று மிஞ்சவா
மழையென்று சொல்லவா
மகிழ்நிறை என்று போற்றவா
அன்பென்று அணைக்கவா
ஆதுரமென்று முகிழவா
வாழ்வென்று தவிக்கவா
வரமென்று நிறைக்கவா
முகமென்று கைஎன்று
கனி வாய் இதழுமிழ் ருசிக்கவா
பிள்ளைமொழி ரசிக்கவா
போக்கிரிஎன்று பெருமிதிக்கவா
பொற்சுடரே என்று ஆராதிக்கவா
மனமெங்கும் ஆனந்தமாட
மடியிட்டு தாலாட்டவா
சின்னதொரு சிரிப்பை..சிந்திவிட்டாயடி
சித்திரப் பேரன்பே...
என்னெற்று நான் மொழியெடுத்து கோர்க்க
முத்தும் பவளமும் முத்தாரமிட்டு
முத்தமிடும் பேரழகு உன்னை
அத்தை மடி மெத்தையென அன்றொரு
கவி பாட.........அவன் சொல் தூளியிட்டு
ஆராரிரோ மொழிதொட்டு...தாலாட்டுகிறேன்
அன்னையடி நீ எனக்கு
அன்னமடி நீ எனக்கு
நிம்மதியடி...நீ எனக்கு...நீள்பெரும்தவமே
பொன்கழஞ்சென்று மிஞ்சவா
மழையென்று சொல்லவா
மகிழ்நிறை என்று போற்றவா
அன்பென்று அணைக்கவா
ஆதுரமென்று முகிழவா
வாழ்வென்று தவிக்கவா
வரமென்று நிறைக்கவா
முகமென்று கைஎன்று
கனி வாய் இதழுமிழ் ருசிக்கவா
பிள்ளைமொழி ரசிக்கவா
போக்கிரிஎன்று பெருமிதிக்கவா
பொற்சுடரே என்று ஆராதிக்கவா
மனமெங்கும் ஆனந்தமாட
மடியிட்டு தாலாட்டவா
சின்னதொரு சிரிப்பை..சிந்திவிட்டாயடி
சித்திரப் பேரன்பே...
என்னெற்று நான் மொழியெடுத்து கோர்க்க
முத்தும் பவளமும் முத்தாரமிட்டு
முத்தமிடும் பேரழகு உன்னை
அத்தை மடி மெத்தையென அன்றொரு
கவி பாட.........அவன் சொல் தூளியிட்டு
ஆராரிரோ மொழிதொட்டு...தாலாட்டுகிறேன்
அன்னையடி நீ எனக்கு
அன்னமடி நீ எனக்கு
நிம்மதியடி...நீ எனக்கு...நீள்பெரும்தவமே
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..