Monday 31 August 2015

அதீதங்களின் உச்சம் செல்

புகை
அமைதியா...புகை

மது
நிம்மதியா...குடி

மாது
இன்பமா ..நாடு

பொருள்
மகிழ்ச்சியா...சேமி

அனைத்திலும்...
மிச்சம் வைக்காமல்
அதீதங்களின்
உச்சம் செல்

ஆதிக்கமாய் உள்சென்று
உன்னை மூழ்கிக் கொள்

கால கட்டம்
நிச்சயம் உதறும் உன்னை
ஒருநாள்
வெளித்தள்ளி

அனைத்தும் அனுபவித்த
சித்தார்த்தன் தானே
ஆசைதுறந்து...பெளத்தனானான்

சாதனையாளனை
சர்ப்பம் தீண்டினாலும்
அமிர்த ஆயுளே பெறுவான்
அவனி வெல்ல

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..