Sunday 30 August 2015

சுதந்திர சுவாசத்தின் சுபிட்ச திருநாள் (ஆகஸ்ட் 15 )

ஸ்ரீ அரபிந்தோ பிறந்தநாள்...
***************************************

அருளே தவமே
அரபிந்த வேதமே

ஒளியே ஒளிச்சுடரே
ஓங்குநிறை புகழே

விடுதலை தர
விழியேந்தி நாடு வந்த
நலப்பெரும் நம்பிக்கையே

மனமுன்னேற்றங்கள்
தர வரும் மகத்துவமே

மண் உதித்த திருநாளில்
மண தென்றலாய் பூமிநிறையும்
புகழ் நிறையே

கோமகனாய் ..கோடிசெல்வ வாரிசாய் பிறந்து
உயர்கல்வி...உயர் முன்னேற்றம் கண்டு
தியாக போராட்டம் சிந்தனையணைத்து

விடுதலை வேண்டி சிறை கண்டு
இரும்பு கம்பிகளிடையே...இளகும் மனதின்
உள் ஆழம் சென்று.....மனபல தவ வலிமை பெற்று

பொய்மை ..கோப...துவேச..துரோக...
துர்குண இருள் விலக்கி....

நேர்மை..உண்மை..அன்பு நேசமென
உயர் மனம் விருத்தியடைய

வழிகாட்டி...ஒளிகாட்டும்....விடியலே
வண்ணத்திரு வளர் மேனியே

ஜீவசமாதி தந்து ஜீவன் எழும் பெருமகனாரே

உருகி அழைக்க...உடன் வந்து நிற்க....
கருணை கண்களால் அணைத்து
கனிவு கரங்களால் இமைநீவி
காக்கும் வழியாய்..வலிநீக்கும் வசந்தமாய்

அம்மா ...அம்மா..என்றே கதறிடும் மனம் தழுவும்

அன்னையெனும் அரும்பெரும்
ஆற்றல்தந்து அவனிசூழும்....அகலொளி மலரே

எங்கள் அரவிந்த பேருண்மையே

பவித்திர அன்பின் பரிசுத்த பாசமே
பாவங்கள் நீக்கு ஜீவ சுத்தமாக்கும் ஸ்தூல பிரமமே

மலருறையும் தேனெடுத்து
மணம்நிறையும் பூக்கள்தொடுத்து
மகிழ்வுநிறையும் மனமேந்தி
மதனோற்சவ பிரியங்களுடன்

மகிழ்தவம் நீர் பிறந்த புண்ணிய விடுதலைநாளில்

மகேசதிருப்பாதங்களில் சமர்ப்பணமாய்
சரணாகதியாகி.......உயிருருகி நிற்கிறோம் தேவமே

இம்மை ..இடர் விலக்கி
இன்ப வாழ்வு நிலைநிறுத்தி
இயல்மன விசாலம்தந்து

அன்பென உருதிருமாற்றம் உய்வித்து

வளர்மன முன்னேற்றங்களாய்
வந்தணைத்து வழிகாட்டி காப்பாய் பகவானே

ஓம் ..ஓம்..ஓம்...மா...சரணம்

ஓம் நமோ பகவதே..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..