Monday 31 August 2015

திருவோண திருநாள் வாழ்த்துக்கள்



தேக்கும் பாக்கும்
தென்னை மரப் பிரியங்களுடன்
கூடிக் களித்து
கும்மாளக் குருத்திட

எழில் கொஞ்சும்
இயற்கைவதன அழகு
நிலநீர் ..நீள் வசந்தமாய்

சேட்டன் சேச்சிகளின்
செந்நிற மேனியோடு
வனப்பு சிலிர்த்து தளிராட

அழகோடு அறிவிலும் முதன்மை சிறந்து
குளுமைகண்டாடும் கேரள மக்களிடை

நடைபெறும் நலம்பெற்ற
கம்யூனிச நல்லாட்சி

கண்டு களித்து ..
தன் தலை வாமனனுக்கு ஓரடியாய்
கொடுத்து பாதாளம் சென்ற
பஞ்சதீர்த்த மன்னனாம் மகாபலி
வரவேற்று

வாசலெங்கும் பூக்கள் கோலமிட்டு

வரவேற்பு பிரியங்கள்யேந்தி
கைகொட்டுக் களியாடி

அழகுடுத்தி
யாணைத்திருவிழா காணும்

அன்புநிறை அண்டைமாநில
சோதர சோதரிகளுக்கு

இனிய திருவோண திருநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..