Saturday 29 August 2015

தேன் மதுர கீதமே

தேவ வேதமே
தேன் மதுர கீதமே

சூட்சமபிரியமே
சூழ்நிறை தாகமே

அமுதநாதமே
அன்னையெனும் திருமேனியே

வேண்டுவோர் வேண்ட
நாடுவோர் நலம்பெற
உருகி உன்னை அழைக்க
உடன் ஒடி வந்து

நல்வழியென ...உன் வழி தந்து
எங்கிலும் எதிலும்
எமக்கு முன் சென்று....தீமைகள் விலக்கி

நற்பாதை செப்பனிடும் ..ஜீவஒளிப் பிரமமே

உம் மலர்ப்பாதங்களில்..மண்டியிட்டு சரணடைந்து
பிறவிமோடசம் பெறுகிறோம்..பேராண்மையே

மா...சரணம்

ஓம் ஆனந்தமயி...சைத்தன்ய மயி...சத்யமயி..பரமே..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..