Sunday 23 August 2015

சீர்பெருமை மேன்மகனாரே

நட்பின் இனிமையாய்
நல்மனப் பிரியங்கள்யேந்தி

நல்வாக்குசொல்லும்
செல்வாக்கு பெற்ற..... Bala Chander

இனிய தோழமைக்கு....
ஆனந்த அவனி உதி திருநாள் வாழ்த்துக்கள்

அன்னைமொழி நேசிக்கும்
அனைவரையும் ...தன் தாய்ப்பால் பகிர்
உடன்பிறப்பென்று ..உடன் அணைத்து
வாழ்த்தும் மனம் யாருக்கும்
வாய்த்ததில்லை ...தங்களைப் போல்

இளமை குன்றா என் தமிழ்
இந்தவிசயத்தில் தங்களை
என்றும் பதினாறாய் வைத்திருக்கிறாள்
எனும் பொறாமை ..எப்போதும்..என்னுள் ஓர் ஓரத்தில்

அன்பும் அதிகாரமும் ..
வளமும் வளமையும்
நலமும் நன்மையும்
பணிவும் பாந்தமும்
கனிவும் கருணையும்

ஒருசேர ஒருங்கிணைத்து மொழி துள்ளி
சட்டம் படித்து சாட்டையடி எடுத்து
அரசாளும் மாட்சியையும் ..குடியாட்சி கேள்விகேட்டு
கூண்டில் ஏத்தி குத்திக் கிழிக்கும்
கூர்முனை பேனா ஆயுதம் ஏந்தி

ஆயுத்த வேள்வி செய்யும் துணிச்சலும்

சடசட..படபடவென ....எண்ணியகாரியத்தை
திண்ணியவேகத்தில் முடித்தாளும் திறமையும்

அருளென ..ஒளியென....அவனிநிறைந்த இறையை
பொருளென ..வாழ்வென போற்றி உருகும் தவமும்

குறும்பும் கனிவும் குதித்தோடும் பிள்ளையாய்
குசும்பும் ....குதுகலமும் விளையாடும் பக்குவமாய்

யாரிவர் என்றே யாரறிய சிந்திக்க
நானென்பது இதுதான் என....

செழுமைநிறை..செம்பருத்தி முகம் காட்டி நீவீர் சிரிக்க

அப்பப்பா..பிரமிக்க...ஏராள ஆச்சரிய வளமைகள் நிறை

சிகரப் பொன்னொளி விளக்கே
சீர்பெருமை மேன்மகனாரே
சங்கத்தமிழின் சரித்திர அடையாளமே

தங்கள் அருமைபெருமை திருநாளில்
கவிமலர் கொடுத்து ..கரம் கூப்பி
வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்

ஆசீர்வாதப் பிரியங்கள் வழங்கும் ஆழ்தவ அன்னை
ஒளியருளாய்...ஓங்கிவளர்புகழாய்
என்றும் நிலைத்த தமிழாய்

வாழ்க கல்வெட்டு பெருவாழ்வு ...

இனிய வாழ்த்துக்கள் சார்

1 comment:

  1. திரு. பாலசந்தர் அவர்களுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துகளும் உரித்தாகுக....

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..