Saturday 29 August 2015

அன்பெழில் தத்துவமே ...


அழகொளிதவமாய் வந்தருளும்
அன்பெழில் தத்துவமே ...

ஏற்றுமிகு வாழ்வு தா
என்றும் நிறை அமைதி தா
சுற்றம்சூழ் இனிமை தா
நலம்பல ஊன் தா
நிமிர்திமிர் மனம் தா
பொறுமை உருவென உடன் நிறை
பாதுகாப்பாய் பக்கம் இரு
பவித்தரமாய் மனதாளு
பக்குவமாய் அறிவு நிறை

தாயே அருளே தன்னிகரில்லா நிம்மதியே
நித்தம் உன்னைகதியென நாடி

உன்னையின்றி வேறில்லை என்றே வேரோடும்
என் மனப் பிரியங்களை..உயிர் உருகும்
வேண்டுதலாக்கி வேள்வி உன் பாதமலர்களில்
சமர்ப்பிக்கிறேன் தாயே

தாய்மைநிகர் தமையன் தரணி வெல்லும்
தலைவனாய் வெற்றிபுகழ்...ஆழ்நிம்மதிகண்டு
அகில்பெருவாழ்வு வாழ அன்னையே
என்றும் உடனிரு....உன்னொளிவழியாய்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி ..பரமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..