Sunday 2 August 2015

இனிய முத்த வாழ்த்துக்கள் தங்கமயிலே

ஆதிரை அழகாய்
ஆயுள் தவ வரமாய்

அன்பரசி மொழியாய்
அக்காளின் பேத்தியாய்

அவனி வந்த
அழகு இறை
வண்ண தங்கமயிலுக்கு...ஹன்சிதா..க்கு
வயது நான்கு

வாழ்த்தலாம் வாருங்கள்
நட்பினிமைகளே

தெய்வத்தின் மேன்மைபடைப்பாய்
தேவதை பிரியங்கள் கொஞ்சி
முப்பெரும் தேவிகளும்
முழுநிறை உருவம் ஒன்றாகி

அகம் மகிழும் தமிழாய்
ஜெகம் போற்ற
அறிவுக் களை..அழகு குவளையேந்தி

எங்கள் மகள் Indhumathy Chilamparasan வயிறு உதித்த
அதிர்ஷ்டப் பெரும் திருவே

கொஞ்சல் மொழிக் கனிவே

உற்றுநோக்கும் எதையும்
உடன் செய்யும் தீரமும்

சொல்லும் மொழியை....
மெல்ல கேட்டு...உடன் பதிந்து
இடம் பொருளென இப்போதே
பயன்படுத்தும் அறிவும்

ஆகாசபிரியங்கள் கொஞ்சி
கழுத்து கட்டி உறவாடி
இரும்பையும் இளகவைக்கும்
செல்லச் சிணுங்கல்களும்

அமைதியாய்..ஆளுமையாய்
பிள்ளையென்ற அச்சலாத்தி படுத்தாமல்
பெரும் குமரிப் பக்குவமாய்

இப்போதே இனிமைபிரியமாடும்
உன்னுடன் இருக்கும் நிமிடங்கள்

கேட்குதடி செல்லமே
இன்னும் இன்னும் ஆயுள்கொடு
இமை தட்டா வரம் கொடு இறையே
என் திருமகள் அறிவை அணைத்துக் கொண்டே
நான் முக்தியடைய என்றே ....உருகி

வரம்தர வந்துதிக்கும் கடவுளாய்
எங்கள் வம்சம் கொழிக்க வந்த
வாரிசு பிரியமே

புண்ணியதவம் செய்திருக்கின்றனர்
உன்னை பூமகளாய் தன்னில்
கருவென நிறை தாங்க உன் பெற்றோர்

எழில்கொஞ்சும் வதனமே
ஏகாந்தம் நிறை இயற்கையே
நான் கொஞ்சிய மகளின்
மடி உதித்த மரகதமே
என் பிரிய தங்கமயிலே

என் மூத்த உடன்பிறப்பாய்
தாயெனும் தமக்கையான
வேணி அக்காவின்
அன்புபேத்தி அம்முவே

என்றும்..என்றென்றும் நீ

அன்னை கொஞ்சும் ஆருயிர் பிரியமாய்
அவனி வெல்லும் வாழ்வு வாழ்ந்து

தோள்நிறைமாலைகள் தாங்கி
சந்தனவாசமுடன்..சரக்கொன்றை மணமுடன்
சந்தோஷபெருவாழ்வு வாழ

நான் வணங்கும் அன்னை வணங்கி
என் ஆயுள் சமர்பித்து..உன் ஆயுளுடன் இணைத்து
இன்னும் கோடி ஆண்டுகள் நீ வாழ

பிரியமலர்தூவி வாழ்த்துகிறேன் செல்லமே

வாழ்க வாழியடி...எங்கள்
வாழையடி..வாழையே

இனிய முத்த வாழ்த்துக்கள் தங்கமயிலே

3 comments:

  1. வாழ்த்துவதுக்கு காலம் தேவையில்லை ஹன்சிதா செல்லத்துக்கு என் வாழ்த்தும் ஆசிகளும்.

    ReplyDelete
  2. அருமை!

    நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..