Sunday 23 August 2015

உரு...உருக்குலைகிறது புகையென

உரு...உருக்குலைகிறது
புகையென

பெரிய கூச்சல்
கத்திய ஆர்ப்பாட்ட அழுகை

கன்னம் வழியும் கண்ணீர்சரம்
ஏதுமில்லை

கவலை தோய்த்த
இந்தியமுகமெங்கும்
இருள்சோககுவியல்

தடைபடும் வேகமும்
தடுமாறும் சிந்தையும்

தளர்ச்சியாய்...சோர்வணக்க

எதிர்ப்பையும் இழப்பையும்
எடுத்துச் சொல்லும்

வலிமை ஆயுதமான.....

கனத்த மவுனம்
காட்சியாக்குகிறது

அங்கு
இயற்கையின்....இடப்பிளவை

அண்ணாரின் ஆத்ம விடுதலையும்

ஆயுள் மைல்கல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..