மனிதர்களை புரிவதில்
மாறுகண் உடையவள் நீ
விக்கி திக்கி
திணறிய போது
திசையும் காட்டினேன்
வாசல்தட்டிய பிரியங்களை
வரவேற்கத்தெரியாமல்
வந்தமர்ந்த சொந்தங்களை
ஆராதிக்க புரியாமல்
அலங்கார குலுங்களில்
ஆதர்ச வேசத்தில்
வண்ணம்தீட்டிய பொய்களில்
வார்த்தைபுரட்டி வாயாடி
ஏளனத் திமிராய்
ஏற்றிய ஏணி
தவறவிட்டு
தவிப்பாய்
மொழிக் கொக்கியிடுகிறாய்
எப்போதும் பழிபோட
எதிராய் எவராவது உனக்கு
அமர்ந்து விடுவார்கள்
இம்முறை நான்
குயவன் கை மண்பாண்டமாய்
கூத்தாடி உடைத்து விட்டு
ஊர் ஒப்பாரி வைப்பதால்
உடைந்தது ஒட்டிவிடுமா
ஓடி ஓடி மறைத்தாலும்
ஓங்கிய ஆதவவிழி ஒளி தான்
மறைக்க முடியுமா
கோபங்களை விட
கொழுந்தெழுகிரது...
நானாகி நேசித்த பிரியம்....
நெம்புகிறது
பாவம் நீ இன்னும்
பச்சப்புள்ளையென
மாறுகண் உடையவள் நீ
விக்கி திக்கி
திணறிய போது
திசையும் காட்டினேன்
வாசல்தட்டிய பிரியங்களை
வரவேற்கத்தெரியாமல்
வந்தமர்ந்த சொந்தங்களை
ஆராதிக்க புரியாமல்
அலங்கார குலுங்களில்
ஆதர்ச வேசத்தில்
வண்ணம்தீட்டிய பொய்களில்
வார்த்தைபுரட்டி வாயாடி
ஏளனத் திமிராய்
ஏற்றிய ஏணி
தவறவிட்டு
தவிப்பாய்
மொழிக் கொக்கியிடுகிறாய்
எப்போதும் பழிபோட
எதிராய் எவராவது உனக்கு
அமர்ந்து விடுவார்கள்
இம்முறை நான்
குயவன் கை மண்பாண்டமாய்
கூத்தாடி உடைத்து விட்டு
ஊர் ஒப்பாரி வைப்பதால்
உடைந்தது ஒட்டிவிடுமா
ஓடி ஓடி மறைத்தாலும்
ஓங்கிய ஆதவவிழி ஒளி தான்
மறைக்க முடியுமா
கோபங்களை விட
கொழுந்தெழுகிரது...
நானாகி நேசித்த பிரியம்....
நெம்புகிறது
பாவம் நீ இன்னும்
பச்சப்புள்ளையென
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..