Sunday 23 August 2015

மன வண்ண ..மங்கல மண் வளையல்

சிணுங்குது
கொஞ்சுது

குலுங்கி மோதி சிரித்து

சித்த நேரம் என்னை கவனியேன்
என்றும் கெஞ்சுது

பேசாது உறையும்
பாறை நிமிடங்களை
பேரொலியாகி
உளி உடைக்குது

அந்தரங்க சொர்க்கத்திற்கு
அழைப்பு விடுத்து
இஷ்டபட்டு கஷ்டமெடுத்து
மெத்தையுடையுது

கருப்பிள்ளை மடிநிறைய
கனிந்த மொழி பேசுது

களமாடும்...எங்கள்
கண்ணாடி நேசத்தை
கச்சிதமாய் களவாடும்

மன வண்ண ..மங்கல
மண் வளையல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..