Tuesday 12 May 2015

மதிப்பெண்கள் என்பது வழியே


விடிய விழித்து
விடிய விடிய படித்து

ஆண்டவன் வணங்கி
அனைத்தையும் அறிவாய் புரிந்து

ஏட்டுக்கல்வியை
எழுத்தில் உழுது விதைத்த...வெற்றியை
அறுவடை செய்யும் ஆனந்த நாள்

தவிப்போடும் தன் முனைப்போடும்
களம் காண காத்திருக்கும் மாணவர்களே
உடனிருந்து நீரூற்றி பயிர் வளர்த்த பெற்றோரே

மதிப்பெண்கள் என்பது வழியே தானே தவிர
வாழ்க்கையில்லை.....
மான அவமான மாற்றுக் காரணி அல்ல

எதுவாகினும் நம் பிள்ளை என பெற்றோரும்
எதனாகினும் நம் வழிதிசைகாட்டி என மாணவர்களும்
புரிந்துணர்ந்து...

நல்மனமாய் ஏற்று...நல் மணம் பெறும் வழி பெற
வாழ்த்துக்கள்

முன் ஏர் பாதையில் பின் ஏரும் என
வலி சுமந்த அனுபவ பக்குவ பெற்றோர் அணைத்து
அரும்புகள் காத்து.....வழிப்பாதை காட்டுவீர்

ஆயிரம் கோடி அணுவில் ..ஓர் அணுக்கருவாய் முன் வந்து
மனிதராய் பிறந்து சாதித்து...மாண்பு பெற்ற பிஞ்சுகளே
மென்மேலும் நீர் வெற்றியணைக்க
இனிய வாழ்த்துக்கள் குழந்தைகளே !!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..