Tuesday 19 May 2015

தாயா...சேயா.... யாரிங்கே...நான்

கலங்கும் முன்
கண்தூசி எடுக்கிறாய் நீ

உமக்கு ஒன்றெனில்

மனவலி இடம் மாற்றிக்
கொள்வதை விட
மாற்று வழி நானறியேன்

உளமது கொதிக்கையில்
உறுத்தும் விழி உறங்குமா

இதழோடு முடியும்
சிரிப்பணைத்து
நிமிட..நாளாய் ..நிதர்சனம்
கடந்த போதும்
சிந்தை குவிதல்
வலி புள்ளியிலே....

துடித்தே துவள்கிறதே
எழும்பும் உயிர் துடிப்பு

பக்குவமடைந்தும்
பதறுதே ....

தாயா...சேயா....
யாரிங்கே...நான்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..