Tuesday 26 May 2015

தேனமுதப் பூவடி நீ

காணாத கனவு கண்டு

வரும் முன்
தவிக்கிறாய்

வந்தவுடன்
வடிந்து... மேல்
விழுந்தே அழுகிறாய்

தோள்சாய்ந்து இதமாகி
தொட்டு பேச மலர்கிறாய்

உறவுகளின் இரவுகளை விட

நினைவுகளின் பகலிலேயே

நரம்பெங்கும் லயம் மீட்டி

தேகச் செல் நிறையும்
தேனமுதப் பூவடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..