Tuesday 26 May 2015

அரியணை ஏறுகிறது ..அரும் சாதனை பெண்மை....

அரியாசனம் ஏறும் அரும் சாதனை....

வந்த தடைகளை தகர்த்தெறிந்து

வாழ்ந்த அனுபவங்களை கற்றுத் தெளிந்து

வாழ்நாள் சாதனையாய்.....
வாழ் நிமிடங்கள் துணிச்சலாய்

வாழ்பிறவி சவாலாய்
வாழ் மக்கள் மனம் குளிர

அரியணை ஏறுகிறது ..அரும் சாதனை பெண்மை....

தமிழ் கற்றோரும் சொல்வளமை பெற்றோரும்
திராவிட வழிப் பாரம்பரியமும்
காளைமாடென கைவிரித்து
தேசியம் ஆண்ட பரம்பரையும்

நாடாள விதியெழுத
நிகழ்வு மாற்றி.....
நிதர்சனம் கண்டு
திரையெழுந்த வெற்றியை
அறிமுகமாக்கி....களமிறங்கியது
அன்றைய....இரு வித்திலை...வெற்றி இலை

மக்கள் திலகம் ஆசியுடன்
மக்கள் தம் ஏகோபித்த ஆதரவுடன்.....

மக்களின் முதல்வராய்
வெகுண்டெழும்

சோதனைகள் பல வென்ற
சாதனை பிழம்பே

சிம்மாசனம் ஏறும் சிம்ம வாகினியே....

கல்லடி சொல்லடி பல பட்டாலும்..காய்த்து கனிந்து
பசிநீக்கும் தாய்மை மரமாய்
தரணி எழுந்த கற்பகத்தருவே

வெற்றியின் பெயரை வேரணைத்த நீர்

வளர்ச்சியின் பாதையில்
வண்ணபூங்காத் தமிழகம் அமைக்க

வாழ்த்தி வணங்கி
வரவேற்று மகிழ்கிறோம்...

சரித்திரம் போற்றும்
சாதனை பெண்மணியே

வரலாறு வெல்லட்டும்
உம் வாழ் நாள் துணிச்சல்
வெற்றி புகழ்....

கல்வெட்டாய் நிலைபெற்று நீடிக்கட்டும் .....
உம் போராட்ட பெரும் காவிய பிறவிப்பயன்

வாழ்க வளர்க தமிழகம்

உம் விழி வழி ஆட்சிப் பாதையில்......!!!!!

வாழ்த்துக்கள் அம்மா..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..