Tuesday 26 May 2015

ஈன்ற இந்நாளை இனிதே நினைவுகூர்ந்து

இறைத்தமிழ்வேந்தரின் இரா. குமார்...சிவத்தமிழ் திருவிழாவின் ..
ஓராண்டு..நிறைவுப் பெருநாள்

ஆண்டொன்று ஆகிவிட்டதா.....
தில்லையம்பலத்தில் சிவனவன் திருவிழா கண்டு....

மொழியும் மொழி வளமையும் ஒருங்கே சலங்கை கட்டி
புத்தகமாய்...இசையாய்...சிவன் அழைக்க

மடாதிபதிகள் பெருமையாய்...மரகத மாணிக்க..மொழி முடிசூட
மதம் கடந்து ..திரு அப்துல் காதர் அய்யா குரல்வளமையில்

இரும்பென மனம் படைத்து...தீரத் திமிராய் வீற்றிருக்கும்
எங்கள் ஆசானை.... நெகிழச்செய்து.....அரங்கெங்கும் அசையாமல் அமர ...........

நானும் ஓர் அங்கமாய்..அங்கிருக்க..அணுஅணுவாய் இறங்கியது..அனலாய் சிவ ஒளிப்பிழம்பு

திருமதி செல்லி ஸ்ரீநிவாசன்...தன் அமுதுகுரலில் ..நிகழ்வு தொகுத்தளிக்க ........Chelli Sreenivasan

வாசிக்க வாசிக்க ஊண் உருக்கி............
நினைத்தாலே இனிக்கும் சிவவாசகம்,இசையரசி. Girija Hariharan
.திருமதி கிரிஜா ஹரிஹரன்..இன்னிசைகுரலில்..அறிமுகமாய் என் மொழியில் இசைத்தகடு ஒலிக்க .....தொடர்ந்து...அவர்தம் தேனிமை குரலில்...தெள்ளமுது..மொழி இசைப் பாடலாய்........அரங்கேறி ஒலிக்க....

மெய்மறந்து அமர்ந்தது...சிவமும் ..அங்கே சவமாய்.........

ஆண்டு பலவாகினும்...சவகாட்டு சிவனிடம் சென்று....ஆயுள்வேகும் வரை..என்றுமே
மறக்கமுடியா தெய்வீக அருள்விழா....

நினைவுமொழி எழுதும் போது ..சிலிர்க்கிறது....
சிந்தையும் மெய்யும்.....

அன்பு அருள் பாசபெருநிகழ்வை......ஈன்ற இந்நாளை
இனிதே நினைவுகூர்ந்து ...தாய்மை பூரிக்கிறேன் ..பெருமைநிறைவாய்

https://www.facebook.com/photo.php?fbid=710691395661544&set=t.1256619171&type=3&theater

வந்திருந்தவர்களை..மனம் நினைத்து வாழ்த்தி மகிழ்ந்தவர்களை..நெஞ்ச நன்றியோடணைத்து....

அனைவரும் சிவனருள் பெற்று ஆரோக்கியம் வாழ

ஓம் நமச்சிவாய...சிவாய நமஓம்..........!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..