Tuesday 12 May 2015

நேசக் கோழை

தலை கலைத்து
மூக்கு ஆட்டி ..

கன்னம் தேய்த்து...கவட்டுக்குள் புகுந்து ..தோள் சாய்ந்து...

பாடி கேட்டு ..சிரிக்க ரசித்து

உனதான கவலைகள் தாங்கி
எனதான மகிழ்வுகளை தாரைவார்த்து

தாயென சேயென
தானொரு தோழியும் நானுமாகி....

களவுநிலவை
களமாடி வென்று

முத்த வியர்வையாய்
மொத்த இரவும் சூறையாடி

நித்தம் உன்னை புதுப்பித்து

மோட்சம் பெற
ஆசை ஆயிரமிருப்பினும்

வெளிச்சொல்ல வார்த்தையில்லா....

நேசக் கோழை நான் தலைவா.!!!"

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..