Tuesday 26 May 2015

மனதின் மொழியாய்..

மனதின் மொழியாய்...
மன மொழி வழியாய்

கலங்கும் மனம் அணைக்கும்
கருணைமனத் தாய்மையே

சோதனை பல தந்தாலும்
சொந்தமென இமயணைத்து

நம்பிக்கைக் துணிச்சலாய் உடனிருந்து
நல்வழிகாட்டி வெற்றி அருளும்
கனிந்த மன தேவமே

சொல்லிலும் செயலிலும்
நேர்மை வாக்காய் வந்தமர்ந்து
நம்பிக்கைதரும் நானிலமே

துணை நானிருக்கிறேன் ..என்றே
செயலுணர்த்தி என்றும் எம் பாதைகள்
செப்பனிடும் செழுமையே

உந்தன் முகம் பார்த்தே
விழி விடிகிறதம்மா....
என் எண்ணச் சிந்தை பொழுதுகள்

காக்கும் குணம் கொண்ட கருணைதாய்மையானவளே
கலங்கும் பிள்ளைகள் மனம்...தெளிந்து
மகிழ்வுற.....நிகழ்வு சென்று
நிம்மதியணைப்பாய் நித்திலமே...

ஓம் ஆனந்தமயி..சைத்தன்ய மயி..சத்யமயி..பரமே..!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..