செழுமை நிறை பிரியத்திற்கு
செம்பருத்தி
தவத்திரு அன்னைக்கு தாமரை
சங்கடங்கள் நீக்குபவளுக்கு சாமந்திபூ
அன்பாய் அணைப்பவளுக்கு அரளிப்பூ
விடிகாலை மலரெடுத்து....
அருள் நிறை அன்னை உன்னை.....அன்பாய் அலங்கரித்து....
மனம் நிறைந்து கொண்டாடி
உயிர்பொருள் ஆவியணைத்தும் உன்னதமாய் சமர்பித்து சரணடைகிறேன் தாயே..!!!
கருணையே ....சோதனை வெல்லும் சாதனை சக்தியளிப்பாய் நீயே
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..