Tuesday 26 May 2015

விழி வழி ஒளிகாட்டியே சரணம்

விழி வழி ஒளிகாட்டியே சரணம்

வழிதரும் வாழ்வே சரணம்

மகிழ்வணைக்கும் மரகதமே சரணம்

செம்மை பாதை காட்டும்
செழுமையே சரணம்

அம்மா என அழைத்தவுடன் வந்து அணைத்துக் காத்தவளே சரணம்

நிம்மதி தந்தவளே நன்றி
நிகழ்வாய் உடன் வருபவளே நன்றி

எல்லாம் வல்ல இறையே
என் அன்னை ஆனந்தமே
கதியென சரணடைந்து கதறிய மனம் காத்து நம்பிக்கையளித்தவளே...நல்வழிதந்த என் தாய்மையே..

சரணம் சரணம் கண்ணீர்மல்க நன்றி சமர்ப்பணம்..அம்மா.!!!

ஓம் மாத்ரேய நமஹ.. ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..