Tuesday 26 May 2015

திருமணநாள் திருவிழா

தேவாதிதேவர்கள் வாழ்த்துப் பண் பாட
தேவதைகள் பூத்தூவி மகிழ

தெய்வங்கள் யாவும் வந்து ஆசீர்வதிக்க

பிறவியெடுத்த இந்த ஜென்மம் இணைசேர
காத்திருந்த பலவருட தவமாய்

இன்றென இனிக்கும்
அன்றெனும்...திருநாளில்

ஆனந்த மன மகிழ்வாய்
திருமணநாள் திருவிழா கண்ட

அருமை சகோதரன்........ நந்தகோபால் சண்முகம் & வசந்தி
தம்பதியருக்கு.............

இனிய மணநாள் வாழ்த்துக்கள்

அன்பும் பிரியமும்...மரியாதை நட்பு கண்ணியமும்
இயல்பெனும் அணிகலனாய் பூண்டு
அனைவரிடமும்..எளிமை பாசமாடும்
நீர்...

இமையணைத்து இல்லறவெற்றிகண்டு
காரியம் யாவிலும் கருத்திணைந்து செயலாற்றி
நிம்மதிசந்தோஷமாய்...உம்மில் ஆயுள்நிறை சொந்தமாடிய
குணவதியான ..வசந்த பிரிய வசந்தியுடனும்

கரைகண்ட ஆனந்தவாழ்வில் கலங்கரைவிளக்கமாய்
வந்து வழிகாட்டும் அற்புத நடசத்திர மகவுகளுடனும்

வருஷம் பல,....வண்ணப்பூ நிம்மதிசூடி வாழ

நான் வணங்கும் அன்னை வணங்கி வாழ்த்துக்கிறேன்

வாழிய வாழிய ...சதாபிஷேக சரித்திர பல்லாண்டு....

இனிய மணநாள் வாழ்த்துக்கள் சகோ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..