Tuesday 26 May 2015

ஆதி அந்த சிவ சவமே

ஒளி நிறையான தவமே
ஓதுவோர் மறைபொருளே
அனல்நிறை அணுப்பிழம்பே
ஆதி அந்த சிவ சவமே

பித்தனே பிறைசூடனே
பெரியோனே பெருவருள் தருவோனே

நாதமே வேதமே நாதவேத தத்துவமே
காரியசித்தி கருணையே...கடல்சூழ் நாமேஸ்வரனே

தசாவதார குருமூர்த்தி கீர்த்திநிறை
ராமன் உன்னை வணங்க
இலக்குமணன் துணைகரமெடுக்க
மாருதியும் மயங்கி தவமிருக்க

பொங்குகடல் அடங்கி அமைதிகாக்கும்
ராமேஸ்வரத்தில் பொருள்நிறை அருளாய்
பொதிந்த ..புண்ணிய சாகரமே

அருளே ஒளியே ..அருளொளி ஆனந்தமே

சிவமே .... சிந்தை நிறை நமச்சிவாயமே
கண்மலர்கனி ருத்திராட்சமே
கைலாயவாழ் கனல்கனியே..

உன் திரு தரிசன நிதர்சனமே

கடையேழ்பிறவியின் கடையேறும்
பூமி மோட்சமே...

சிவ சிவ..நமசிவாயமே...!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..