Tuesday 19 May 2015

பெண்மை மழை

வரவில்லை என
திட்டினாலும்

வந்ததும் வரவேற்று
ஆடி மகிழ்ந்தாலும்

விடாமல் கொட்ட...
போதும் நீ போ
வழியனுப்பினாலும்

பொங்கி கரைபுரள
சாபம் நீ என பழித்தாலும்

பெருமை சிறுமையாய்

எதையும் எதிர் அணைக்காமல்

பருவக் கிழத்தியாய்

பொழிந்துகொண்டே
தான் இருக்கும்

தாக தவிப்படக்கும்
தாய்மைநிறை

பெண்மை மழை...!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..