Friday 15 May 2015

வைரக்கட்டை மாராத்தா....!

வெளக்கி துலக்கின
ஈயச்சட்டி போல
இன்னைக்கும்
பளபளனு இருக்கிறா.....

கிழவன் போனாலும்

கிழவி பவுசு குறையாம
அதிகாரம் பண்ணி

காதுவரை நரைச்சும்
கம்பும் கேப்பையும்
குத்திக் குடிச்ச....

நோவு சொல்லாத
வைரக்கட்டை மாராத்தா....!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..