Tuesday 12 May 2015

பரிபூரண சரணம் பவித்ரமே

அருள்கோடி வழங்கும் அன்னை விழிகளே போற்றி
ஆனந்த வழிகாட்டும் அமுதவிழிகளே போற்றி

நல்முன்னேற்றம் தரும் நல்வழிவிழிகளே போற்றி
நன்மையளிக்கும் நல்மனவிழிகளே போற்றி

மன அமைதி தரும் மா தவ விழிகளே போற்றி
கருணைநிறை கனிவு விழிகளே போற்றி

எங்கெங்கு நான் சென்ற போது...
என் வழியாய்..வழியின் ஒளியாய்
ஒளியின் வாழ்வாய்...வாழ்வின் பாதுகாப்பாய் வந்து
தவறுகள் திருத்தி கண்டிப்புடன் நல்வழிப்படுத்தி நிம்மதிமேம்பாடு தரும் சத்திய தாய்மையின் நித்திய விழிகளே

எங்கள் ஸ்ரீ அன்னையின் அருள்விழிகளே....
என்றும் உன் நேர்மை சரணம் சரணம் பரிபூரண சரணம் பவித்ரமே

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே !!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..