Friday 15 May 2015

விலை குறைத்திருக்கலாமோ என்று

ஓயாது பேரம் பேசி
ஒன்றுக்கு பலமுறை
தட்டிப்பார்த்து ..
பானைசட்டி வாங்கியும்

வீடு போன பின்
ஈரமறியா
பலர் நினைக்கின்றனர்

வீதியோர உழைப்பாளியின்
வியர்வை குருதியை

இன்னும் கொஞ்சம்
விலை குறைத்திருக்கலாமோ என்று

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..