Tuesday 12 May 2015

உயிர் தரும் தாய்மையே போற்றி

உயிர் தரும் தாய்மையே போற்றி
உயிர் காக்கும் தாய்மையே போற்றி
உயிர் நேர்மை தாய்மையே போற்றி
உயிர் கனிவு தாய்மையே போற்றி
உயிர் கருணை தாய்மையே போற்றி

வலிக்கும் போதும்..வழியேதெரியா இருள் உணர்விலும்
அம்மா ..அம்மா என்றே கதறும் பிள்ளை மனம் புரிந்து
ஓடி வந்து மனம் தாங்கி மருந்திட்டு
எதுவாகினும் என்பிள்ளை...என்றும் இமையணைத்து
நல்வழி தந்து உடன் வந்து துணையருளும் தாய்மையே

அன்பு நிறை ஆனந்தமேந்தி தவத்திரு தாய்மையாய் வந்த
கருணைநிறை அன்னையே போற்றி போற்றி

ஓம் ஆனந்தமயி ..சைத்தன்ய மயி ..சத்யமயி பரமே !!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..