சூப்பர் ஸ்டார்.........ஸ்டெயில் சவால்
இன பேத வயது கடந்து
மொழியறியா மனிதங்களும்
விரும்பி நேசிக்கும்...
தமிழ் வானின்...தனித்து
வழிகாட்டும் ...வால்நட்சத்திரம்...
வயதாக வயதாக இளமை மினுக்கும்
ஒளிச்சூரியக் கோள் ...எங்கள் சூப்பர் ஸ்டார்
சின்னஞ்சிறு கிராமத்தில்
சிவாஜி ராவாய் குமிந்த..கிரானைட் மலையை
பால சந்த உளி நோக்க
இன்று பேராண்மையாய்...பெருமை பெற்று
காலத்தினும் வாழும்..பல்லவ கலைக்கூடமாய்
உயர்ந்தோங்கி நிற்கிறது...ரஜினி எனும் வரலாற்று அடையாளம்
பெண்கள் பித்தாக...குழந்தைகள் வந்து கொஞ்ச
ஆண்களும் விரும்பி ரசிக்கும் ஆளுமைஆண்மையே
சும்மா கிடைக்கவில்லை..உன் வெற்றி என்பதை
ஊரறியும்...உனைப் போற்றும் உலகநாடும் அறியும்
தட்டிய கல்லை எல்லாம்...மிதித்து ஏறி
சிகரம் கண்ட சிங்கம் நீர்
உன் ஆன்மீகத் தேடலுக்கு ..இமயமே என்றும் எல்லை
எதுவந்தபோதிலும்..எதுவும் எனதில்லை
என்றே எளிமையணைக்கும் உன் ஆத்மா
யார் நீ என்று எல்லோரும் சொல்ல
நான் யார் என்றே ..விடை தேட நீ கிளம்புவாய் ...
தனக்கென தனிப்பாணி வகுத்து
நடை உடை பேச்சு செயல் .என
கூர்மை தீட்டி..எவரையும் பதம் பார்க்காமல்
பக்குவம் அணைத்து.....நடக்கும் ...நல்மன ஜீவிதமே
கோடான கோடி ரசிகர்களின்
அன்புப் பிரியமே.....
ரசனைகளின் ரஜினியே
பாடினாய் ..ஆடினாய்...அழுதாய்..சிரித்தாய்
முறைத்தாய்..அனல் கக்கினாய்..அனைத்தையும் நடிப்பாய்
திரை கொண்டுவந்து ....உன் தொழிலாக்கினாய்
கண்ணென ..கருத்தென .. கடமையாய்..நெஞ்சு தைத்தாய்
சமுதாய குருத்துகளுக்கு....நடிப்பு மீறி நடப்பு சொன்னாய்
சாதனைச்சிகரமாய்...வான் தொட முட்டி நிற்கிறாய்
நட்சத்திர நாயகனே....
வாழ்க உம் பிறவி....வளர்க உன் தேடல்
முயற்சிகளின் ..வெற்றி சாதனை முகவரியே...
எங்கள் சூப்பர் ஸ்டாரே..
வாழ்க பல்லாண்டு பல்கலைகழகமாய் நீர்
இன பேத வயது கடந்து
மொழியறியா மனிதங்களும்
விரும்பி நேசிக்கும்...
தமிழ் வானின்...தனித்து
வழிகாட்டும் ...வால்நட்சத்திரம்...
வயதாக வயதாக இளமை மினுக்கும்
ஒளிச்சூரியக் கோள் ...எங்கள் சூப்பர் ஸ்டார்
சின்னஞ்சிறு கிராமத்தில்
சிவாஜி ராவாய் குமிந்த..கிரானைட் மலையை
பால சந்த உளி நோக்க
இன்று பேராண்மையாய்...பெருமை பெற்று
காலத்தினும் வாழும்..பல்லவ கலைக்கூடமாய்
உயர்ந்தோங்கி நிற்கிறது...ரஜினி எனும் வரலாற்று அடையாளம்
பெண்கள் பித்தாக...குழந்தைகள் வந்து கொஞ்ச
ஆண்களும் விரும்பி ரசிக்கும் ஆளுமைஆண்மையே
சும்மா கிடைக்கவில்லை..உன் வெற்றி என்பதை
ஊரறியும்...உனைப் போற்றும் உலகநாடும் அறியும்
தட்டிய கல்லை எல்லாம்...மிதித்து ஏறி
சிகரம் கண்ட சிங்கம் நீர்
உன் ஆன்மீகத் தேடலுக்கு ..இமயமே என்றும் எல்லை
எதுவந்தபோதிலும்..எதுவும் எனதில்லை
என்றே எளிமையணைக்கும் உன் ஆத்மா
யார் நீ என்று எல்லோரும் சொல்ல
நான் யார் என்றே ..விடை தேட நீ கிளம்புவாய் ...
தனக்கென தனிப்பாணி வகுத்து
நடை உடை பேச்சு செயல் .என
கூர்மை தீட்டி..எவரையும் பதம் பார்க்காமல்
பக்குவம் அணைத்து.....நடக்கும் ...நல்மன ஜீவிதமே
கோடான கோடி ரசிகர்களின்
அன்புப் பிரியமே.....
ரசனைகளின் ரஜினியே
பாடினாய் ..ஆடினாய்...அழுதாய்..சிரித்தாய்
முறைத்தாய்..அனல் கக்கினாய்..அனைத்தையும் நடிப்பாய்
திரை கொண்டுவந்து ....உன் தொழிலாக்கினாய்
கண்ணென ..கருத்தென .. கடமையாய்..நெஞ்சு தைத்தாய்
சமுதாய குருத்துகளுக்கு....நடிப்பு மீறி நடப்பு சொன்னாய்
சாதனைச்சிகரமாய்...வான் தொட முட்டி நிற்கிறாய்
நட்சத்திர நாயகனே....
வாழ்க உம் பிறவி....வளர்க உன் தேடல்
முயற்சிகளின் ..வெற்றி சாதனை முகவரியே...
எங்கள் சூப்பர் ஸ்டாரே..
வாழ்க பல்லாண்டு பல்கலைகழகமாய் நீர்

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..