Tuesday 23 December 2014

புஷ்பாஞ்சலி

அகநிறை அமைதி பிரியத்திற்கு
ஆழ்சிவப்பு மலர் சமர்ப்பணம்

கனிவுநிறை கருணைக்கு
கருந்துளசி சமர்ப்பணம்......

அன்புநிறை திருஉருவுக்கு
மஞ்சள் மலர் சமர்ப்பணம்.....

வேள்வியாய் தீஎடுக்க
வெற்றியாய் உடன் நிறைந்து

பொய்மை களையும் பேரன்பே...
பெரும் ஆற்றல் ஆளுமையே

என்றும் சரண சமர்ப்பணம் தாய்மையே....!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..