Thursday 25 December 2014

வாசல் வந்த வசந்தப் பிரியங்கள்

அன்பின் மொழிகளும்..பாச நேசங்களும்
இத்தனை பவித்ர நிம்மதி தருமா???

ஸ்ரீ ரங்கம் இருந்து ஒரு தேவதை வந்தாள்.Uma Sundar
தோழிமார் படை சூழ
தெய்வம் அழைத்து கொண்டு
நட்பெனும் உயிராட...

நான்கு வருடமாய் முகநூல் தொடங்கிய நாள் முதல்
அன்பு இழையோடிக் கனிந்த நட்பின் பழமாய்
இன்று வரை முகமறியாமல்....
நேரில் பார்த்தவுடன்..பேசவும் வார்த்தையில்லை
மனம் நிறைந்த ஆனந்தத்தில்...........

கிட்ட நெருங்கி அமர்ந்து...தொட்டு பேசி எப்போதோ
மனம் கலந்த நம்பிக்கையாய் அவள் உடனிருந்த போதும்
இன்று விழிகளின் சந்திப்பில்.........
புதிதெனும் தயக்கமும்...முகமறியா கலக்கமும் கொஞ்சமும் இல்லை

அதே சிரிப்பு..அதே பேச்சு..அதே குதுகலம்...
பள்ளி..கல்லூரித்தோழியாய்..பார்த்தவுடன் கட்டிக்கொண்டு
கண்நிறைத்து இமைதட்ட மறந்து சிரித்தோம்

எப்போது நீ என்பது என் நம்பிக்கை டி உமா
என்னவள்..என் நன்மையின் நலமானவள்....
எதுவும் பேசலாம்...எல்லாம் விளையாட்டே என்று
உரு கொண்டு உயிர் அணைக்கும் பாசம் நீ
பார்க்காத போதும்..இன்று பார்த்த போதும்...

அன்பு உமாவுடன் ..ஆசைத் தங்கைகள்.Janani RajagopalShobi Shobana
ஜனனி..&..சோபனா

உமா தான் எனக்கு நான்கு வருட பழக்கம்
ஒரே ஊரில் இருந்தும் ..ஒரே காற்று சுவாசித்தும்
நீங்கள் இப்போது தானே என்னைப் பார்க்குறீங்க

எப்படி ..இப்படி...அக்கா அக்கா என்ற வாய் ஓயாத அன்பு
பேசும் போது விட ..உங்களைப் பார்க்கும் போது விட
பிரியும் போதே...மனசு இழப்பை உணரறுகிறது

விழி கசியும் நீராய்,....ஜனனி...& சோபி

அருகிருந்தும் இத்தனையும் அணைக்க நேரமில்லமல்
எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன் நான் என்றே
ஆதங்கமாய் மனம் சலிப்படைகிறது...டியர்ஸ்

கட்டிப் போடுகிறது...நகர விடா பாசங்கள்

மறக்க முடியாத வசந்த நாள்

குட்டி சாண்டகிளாஸ் களாய்...ஸ்ருதி & சுஜித்

வந்துவிட்டது..என் மனவீட்டில்....ஆனந்த கொண்டாட்டமாய்
பிறந்துவிட்டார்...அத் தேவதூதன் என்றே...

நிம்மதி நிறைந்தது...அன்பின் செல்வங்களோடு அளவளாடிய நிமிடங்கள்

விடை பெற முடியாமல்...விட்டு விட்டு வந்தேன் மனதை கொல்லும் பிரிவறியா ப்ரிய நேசத்தை அவர்களிடமே

நல் மன இதயங்களை..நட்புறவாய் தந்த முத்தான முகநூலுக்கு
முழுமன ஆனந்த நன்றிகள்

Miss u Thangam...& chellam's............

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..