Friday 19 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-37

மெது மெதுவாய்
என்னில் ஓடி
என் உணர்விலைகளை
தூண்டிச் செல்லும்
பொன் வண்டு காதல் நீ


தன் அன்பு முழுவதுமாய்
எழுதப்படாமல்
சுருட்டி மடித்த
வெள்ளைக் காகிதம்
மிச்சம்மாய் தான் உள்ளது
ஒவ்வரு உண்மை காதலிலும்..


நீ எனைப் பிரிந்த பின்
யார் என்னை
கடந்து போனாலும்.........
உன் உருவம் சுமந்தே செல்கின்றனரே..ஏன்??


என் உயிரின் இசையை
வேரோடு தூக்கிச்
செல்கிறது..உன்
மூங்கில் காடுகள்....


தன் இறகுகளை
தானே.........
கோதி கோதி
சுகம் கொள்ளும்
பறவையாகிறேன்
உன் காதலில்....எனக்குள் நான் முகம் புதைத்து


தூக்கத்தில் வந்து
முத்தமிட்டு
துயில் எழுப்பினாலும்
ஆறாம் அறிவு மறந்துபோய்
கோபம் கொள்கிறாயே காதலே


நீயும் நானும்
எழுந்த பின்னும்...
நாம் அமர்ந்த
பூங்கா இருக்கையில்
அழிச்சாட்டியமாய்..
அடம் பிடித்து
எழாமல் உறைந்திருக்கிறது
நம்மை கட்டியணைத்த காதல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..