Friday 26 December 2014

தேடல்களின் தோழியாய்....

அன்பின் நிறைவாய்......
அழகின் முகவரியாய்....

குழந்தையின் பிரதிநிதியாய்......
தேவதை பிரியங்கள் கொஞ்சி வந்த
ஆனந்த செழுமை கிருத்திக்கு

தாய்மடி தாலாட்டு நாள் வாழ்த்துக்கள்....

தேடல்களின் தோழியாய்....
நளினங்களின் நட்பாய்.....

சிந்தனை கருத்து வளமையுடன்
தன்னிகரில்லா தன்னம்பிக்கை யுடன்....

எத்துனை நிறைந்த போதும்
தான் எனும் தனித்துவமாய் மிளிர்ந்த போதும்

பணிவெனும் அடக்க ஆளுமையாய்.....குணமாடும் கனிவழகே...

அனைவரையும் அன்பு நோக்கும் விழிகள் கொண்டு அரவணைக்கும்
பெண்மை பேரன்பே....

தரணியாளும்
தரணின...தளிர்மலர் தாரகையே.....

என்றும் நீர் ...சந்தோஷப் பூச்சூடி
மங்கலப் பிரியங்கள் சூழ...

மனம் கொஞ்சும் மகவுகளுடன்.....

மகிழம்பூ நிம்மதியணைத்து..

மாதரசியாய் ஆண்டு பல வாழ

ஆழ் மன ஆனந்த வாழ்த்துக்கள் தோழி.


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..