Sunday 28 December 2014

மருது சகோதரர்கள்

தீர்க்கமான கண்கள்
தினவெடுத்த மார்பு

முரட்டு மீசை
முண்டாசு உருவத்தில்

வீரம் விளையும் நிலமாய்
வாழ்ந்து மண்ணாண்டு
சரித்திரம் வென்று

விழுப்புண் தாங்கி
பகை ஒழித்து
வம்சம் காத்து

காவல் தெய்வமாய்
வேரூன்றியுள்ளார்கள்

பெயர் சொன்னாலே
பேயும் நடுங்கும் தீரம் படைத்த

சங்கத்தமிழ் மதுரையின்
தேசவாள்..மருது சகோதரர்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..