Friday 19 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-34

பார்க்காமல்
எங்கிருந்தாலும்
எனை ..உன் உலகுக்குள்
தூக்கிச் செல்ல
யாருக்கும் அடங்கா
திமிராய் வந்து விடுகிறாய்
காதலே



அவள் எத்தேசையாய்
வந்து சாய்ந்து நின்ற
என் வீட்டு சுவர் ஓரத்தில்
நான் பதியன் போடாமலே
படர்கிறது........
மதுகுடம் தளும்பிய
ரோஜா செடிகள்


பூக்களின் இதழ்களில்
ஆழமாய்.....
ஈரமாய்.....
தன் முத்துக்களை
பதித்து செல்கிறது
நிலவு முத்தங்கள்........


என் கோபங்களை
சில்லிடும் பயத்துடன்
இமைக்காமல்
கவனிக்கிறது
உன் காதல்.


எங்கு சென்றாலும்
என்னையும் தூக்கிச் செல்
நானும் வருவேன்
என்று குழந்தையாய்
அடம் பிடிக்கிறது
என்னில்..உன் நிழல்


என்னை பார்க்கும்
போதெல்லாம்
'மோனோலிசா' புன்னகை
ஏந்திக் கொள்கிறது
உன் முகம்.......
புரிந்தும் புரியமால்
நானும் சிரித்துச்
செல்கிறேன்
இது நட்பா...
இல்லை காதலா...


எல்லா மர மண்டைகளுக்குள்ளும்
தலைக்கனம் பிடித்த
அறிவாய் ஒளிந்திருக்கிறது
ஏதோ ஓர் ஆழ்கடல்


6 மாதத்தில்
ஆரம்பித்தது
6 கழுதை வயதாகியும்
விடமுடியவில்லை
நீயாவது என்னை போல்
பழகாமல் இரேன்.....
(நகம் கடிக்க)........


உன்னைக் கண்டது
கூடு உடைத்து
வெளியேறுகிறது
அதுவரை...
என்னால்....எனக்குள்
பொத்தி பொத்தி..
அடைகாக்கப் பட்ட நேசம்..


இல்லாத கதைகள்
பேசிக்கொண்டு.....
இணைந்து நடக்கும் போது....
எதிர்பாரத தீண்டலில்
உரசிக்கொள்ளும் விரல்கள்
கோர்த்துக்கொள்ளும்.....
வினாடியில்.........
ஒரு நட்பு .....
காதலாய் மலர்கிறது


எனை...சரிபாதியாய்
உடைத்து விட்டது
காலம்.....
உனக்கு முன்.....
உனக்கு பின் ..என்று


இனி வழியில்லையென
கதவுகளை மூடுகிறது
வாழ்க்கை..
வாழ்வதற்க்கு
ஜன்னல்களைத்
திறக்கிறது
உன் காதல்


ஊதாவையும்.....
சிகப்பையும்.......
நீயும்..
நானுமாய்...........
இணைக்கிறது
இரவு......



என் மன ஆழத்திலிருந்த
எல்லாவற்றையும் எடுத்து
வெளி தள்ளி விட்டு.....
உனை மட்டுமே நிரப்புகிறேன்
என்னில் முழுமையாய்.......
அலை அடித்து
விளையாடும் நினவுகளுடன்



உனக்கும் எனக்குமான
உலகம் வளர்க்கிறேன்
வருகிறாயா..........
கரம் இணைத்து
காதல் உரமிட

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..