Friday 19 December 2014

என் கதிர் அவனே

என் கதிர் அவனே

மெல்ல எழுந்து
மேகச்சோம்பல்
முறித்து

நாளும் ஒளிக்கரம் நீட்டி
நாழிகையாய் ஓடுகிறாய்

வேதம் நீ
வேள்வி நீ

தீண்டல் நீ
தீச்சுடல் நீ என்றே

உன் சலும்பல்களில்
சிலும்பி.....
இரவுபகலணைத்து
இதழ் விடிகிறதய்யா...

அனல்குழந்தையென
உன்னையே
கொஞ்சிச் சுற்றும்

என் தாய்மை பூமி


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..