Friday 19 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-36

குளிர குளிர
குடை பிடித்து
நனைகிறேன்
கோடையிலும்..............
:
:
:
:
உன் காதல் மழையில்



பறந்து பறந்து
அடிக்கிறது
காதலிலும்
நட்பிலும்
உரிமையுடன் அன்பு


நட்சத்திரக்
கூட்டத்துக்குள்
என் வாழ்வின்
விடிவெள்ளியாய்
ஒளிந்த உன்னை......
அண்ணாந்து
அண்ணாந்து பார்த்து
குழந்தையாய் தேடுகிறது
என்காதல்..


எப்போதுமே
உன்னோடு
குழந்தையாய்....
போட்டியிட்டு
தோற்கிறது
மலரழகு..


காதலின்
வருகைக்காக
மூட்டை முடிச்சுகளோடு
காத்திருக்கிறது
இளமைகளில்
பருவம்......



எதிர்பாராத தருணங்களில்
குறும்பு கண்சிமிட்டல்களாய்
செல்ல காது கடிப்புகளாய்.....
கருணை முத்தங்களாய்
என்னில் கனிகிறாய்
நீ....காதலுடன்!!!!!

அலுவல் நிமித்தமாய்
உன்னுடன் விளையாடும் போது
எப்போதடா உன்னை கைவிடுவோம் என
நிமிடத்திற்கொருமுறை நாட்காட்டி
பார்க்கும் என்னை.........

முக நூல் நட்பு பெருவெளியில்
உன்னுடன் விரல்
கோர்க்கும் போது....
இன்னும் சிறிது நிமிடம்
சிறிது நிமிடம் என என் நேரங்களை
விழுங்கி ..என் விரல்களை
விட மறுக்கிறாய்
என் செல்லக் கணிணியே


நம் பிரிவுகளில்
என் நிழல் தேடுகிறது
நீயும் நானும்
இணைந்திருந்த
நிஜத்தை...



காதலிடம் அடிக்கடி
சொல்ல வேண்டிய
வார்த்தை....
நட்பிடம் தவிர்க்க
வேண்டிய வார்த்தை..


என் அண்ட
சராசரங்களையும்
உனக்குள் கட்டி
அல்லி ராஜ்யமாய்
ஆளுகிறாயடி
என்னை.....


தலைகுனிந்து
உன் திட்டு மழையில்
மெளனமாய் கரைகிறது
என்னிலிருக்கும்
அசட்டு குழப்பங்கள்.....


காதலும்.........
காதல் கிளிகளும்.
பொறாமை கொள்கிறது
உன்னிலிருக்கும்
அழகு பார்த்து........


உனக்காக
பதியமிடுகிறது
காதல்........
என் தாமரைக்குளம்
எங்கும்
ரோஜாக்களை.......



என்னை தீட்டி
தன்னை உச்சரிக்கச் செய்து
விளம்பரப்படுத்திக்
கொள்கிறது-------அழகு


எனக்குள்
உன்னை
நிழலாய்
நிஜமாக்கி
செல்கிறது--காதல்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..