Thursday 25 December 2014

தேவ தூதனின் ...தெய்வீக பிறந்தநாள்


ஒளிவழி வழிகாட்ட....
ஒளியேந்தி..வழியேந்தி

ஒப்பில்லா பிரியமாய்
ஓசையில்லா அமைதியில்

உருதோன்றிய தேவ மகன் அவதரிப்பு திருநாள்

விலங்கு வழி பரிணாமத்தில் கட்டுபாடன்றி
அசுரகுணங்களோடு அலைந்து திரிந்த மானுட குலத்தை
மனமெனும் சக்தி கொண்டு அடக்க

வழிகாட்டும் ஒளியாய் தோன்றினீரே
இறைநம்பிக்கை கருவியே

உனக்கிருக்கும் வலியும் ...வாழ்வுமே
அனைவருக்கும்...நேசி அனைத்து உயிர்களையும்
உன் போலே ...என...சக மனிதனிடமும்..மனிதத்தை போதித்த..புனிதராய்.......

தானே முன்னோடியென...மனிதமாய் பிறந்து
மற்றவர் நலத்திற்காகவே வாழ்ந்து
முள்கிரீடம் தாங்கி
ஆணிவலியோடும்..அறைந்தவர் நலம் நாடி
குருதி வழிய ....சிலுவை நிறைந்தீரே

பிரார்த்தனைகள் கேட்கப்படும்
பாவங்கள் மன்னிக்கப்படும்..என் அன்புசன்னிதியில்
என்றே..மன தடுமாற்றங்களை
தாய்மையாய் ஏந்தி..தன் வழி திருப்பி மனிதம் மேம்படுத்தினீரே

நெருங்கா மனிதங்களையும் தத்துவ தூதுமையாய் நெருங்கி
உள்ளங்கள் உழுது களை எடுத்தீரே

சர்வ வல்லமையாய் நிறைந்து...சக மனிதன் நேசிப்பு தந்தீரே

பாச குழந்தை மனமாய் இருப்பதே ..பவித்ர தொண்டு எனப் பணிந்தீரே

துன்பவேர் களைந்து..இன்ப வேள்வி செய்தீரே

தன்னல பிடிவாத முடவாதம் சொல்லும் மதமெனும்
மதம் விலக்கினீரே

அசுரமெனும் அநீதிமன்றத்தில்
தெய்வநிந்தனை எனும் பழியைஅடைந்தீரே

மனிதம் காத்த புனித மகனை....சிவப்பு அங்கியால் மூடி
முள்சவக்கடி..பெற்றீரே


வருத்தும் வலியோடு ..ஒழுகும் குருதி வழிய
சிலுவை சுமந்து....உயிர் மரித்தீரே

துடித்த உயிர்கள் கண்ணீர் உணர்ந்து
மரித்த ஆண்டவர் மறுபடி பிறந்தீரே

புனித ஆவியாய் பூமியும் நிறைந்தீரே

தேவ தூதனாய் தேவ வலிமை தர
மண் வந்து..மனிதம் காத்து
ஆவி நிறைந்த...ஆத்ம புனிதனே

மனம் கனிந்து மண்டியிட்டு....உருகும் மெழுகாய்
உள்ளம் நெகிழ ....

திருவருகை காலத்தில்..திருப்பலி சிந்தனையேந்தி
குடிலமைத்து...பரிசுகளேந்திய தாத்தாவுடன் வாழ்த்துபாடி
சிலுவைகிளை மரம்நட்டு அலங்கரித்து....

வரவேற்போம் இறை குழந்தையை....

வாழ்த்தி மகிழ்வோம்...சகோதர சகோதரிகளை

இனிய வாழ்த்துக்கள் தோழமைகளே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..