Sunday, 14 December 2014

சந்தோஷங்களை மட்டுமே கொடு

உனக்காக
என்ன வேண்டுவது
என்று தெரிந்த
எனக்கு

உன் கடவுளை
எப்படி வேண்டுவது
என்று தெரியவில்லை

இருப்பினும்
கண்மூடி
உன்னை மனதில்
நிறைத்து

என் முறைப்படி
வேண்டுகிறேன்....
கவலைகளை
எனக்கு அளித்து

சந்தோஷங்களை மட்டுமே
அவளுக்கு கொடு என்று...........................Parvin Banu

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..