Sunday, 14 December 2014

காந்தி ஜெயந்தி


வரலாறாய் வாழ்ந்த மனிதர்கள்
மக்கள் மனதில்......
வயதாகிப் போன
வருடங்களில்
இடம்பிடிகிறார்களோ இல்லையோ...

அன்றாட தினத்தில்
அரசு விடுமுறையாய்
கட்டாயம் இடம் பிடிகின்றனர்

மாகாத்மாக்களை பற்றி
தன் விழி வழியில்
புறம் பேசுவதே ஒரு
புகழ் தேடும் முயற்ச்சியாகிவிட்டது
இன்று சில மனித ஆத்மாக்களுக்கு........

பூத உடலில்வாழும் போது கூட அனுபவிக்காத
பல சத்திய சோதனைகளை
புகழுடலிலும் அனுபவிக்கும்
மகத்தான ஜீவன் காந்தி

அமைதியையும்
அகிம்சையையும்
மாபெரும் ஆயுதமாய்
எடுத்துக் கொண்டு
உலகை நடுநடுங்க வைத்தவர்

இறந்த பின்னும்
வாழ ..இப்போதே
உடல் உறுப்பு தானம்
பண்ணும் நல்ல மனங்களிடையேயும்....

நேர்மையையை
உயிர் மூச்சாய் கொண்டு
சுய நல மறந்து
கடமையாற்றும்
அரசு அதிகாரிகளிடையேயும்

பசித்தவனுக்கு
தன் பசியை பங்கிட்டு
உணவு கொடுக்கும்
ஏழைகளிடமும்

உப்பிட்டவரை
இறக்கும்வரை
மறக்காத
நன்றி உள்ளவர்களிடம்.....



இடதுகை அறியாமல்
வலது கையால்
உதவி செய்யும் உத்தமர்களிடம்

தவறு செயும் சந்தர்பங்களில் கூட..சரியாக செய்யும்
வார்த்தைகள் பிறழாத
வல்லுஞர்களிடம்


என

மானுடம் பொய்த்து
மனிதம் வாழும்
மகான்களிடம்
எல்லாம் இன்னமும்
குடிகொண்டுதான் உள்ளது..இந்த மனித ஆத்மா....

ஒரு வீட்டுக்குள்
உடன் பிறந்த ரத்தங்களையே
ஒன்றினைக்க முடியாமல்
தனித்தனி தீவு தேடும் நமக்கு

ஒற்றுமொத்தமாய் லட்சக்கணக்கான
தொண்டர்களை ஒருங்கிணைத்து
ஒருமித்த குரலில்

இந்திய சுதந்திரத்தை
அகிம்சாவழியில்
அறப்போர் நடத்தி
வெற்றி வாகை சூடிய

அன்னலை...
வாழ்த்த வயதில்லை
வாருங்கள் வணங்குவோம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..