Wednesday 17 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-26

நீ உதடுகளை மட்டும்
வரைந்து செல்.......
முத்தங்களை நான் பெற்றுக்கொள்கிறேன்
காதலிடம்.....


உனை நிறைத்த
விழிகளில்
உன் பிரிவாய் வழியும்
கண்ணீரும்......
நீயே ஆகிப் போகிறாயடி
காதலே


என் கருவிழிகளில்
உன்னை வரைந்து
சென்றது ..காதல்
காணும் பொருள் எல்லாம்
நீயே ஆனாயடி.....


விவரமில்லா.....
விடலைப்பருவத்தில்
உதிரத்துளிகள் சிந்தியாவது
தன்னை மெய்பிக்க.....
ஆசைப்படுகிறது.....
குருதிக்குள் கொதிக்கும்... காதல்..


எல்லாம் முடிந்தது
என எளிதாய் கூறி
திரும்பாமல் சென்ற உன்னை
திரும்பி..திரும்பி....
நினைக்க வைக்கிறது காதல்


நான் ஆவேசமாய் கத்தி
சண்டையிடும் போதெல்லாம்
அமைதியாய் .......
விழியோடு விழிகலந்து
கண்டுபிடித்து விடுகிறாய்
அடி மனக் காதலை.......


தன் வண்ணம் மறந்து.....
என் எண்ணம் கலைத்து
போன காதலினால்.....
களையிழந்து போகிறேன் நான்.


உனக்காக ஊஞ்சல்
கட்ட.என்.வானம் மறந்து
வளைந்து கொடுக்கிறது
என் காதல்

கையில் கிடைத்து
காணாமல் போன
கருணை தேவதை நீ....
நீ விரும்பும் விடுதலை
கொடுத்து....
உன் நினைவுச் சிறைக்குள்
ஆயுள் கைதியானது
என் காதல்..


நீ அருகில் இல்லா
நேரங்களில்
நீ தொட்டுப் பழகிய
பொருட்களை .....
கட்டிப் பிடித்து....
முத்தமிட்டு முத்தமிட்டு
தவிக்கிறது என் காதல்


எங்கேயோ பிறந்த
என்னை....உனில் சேர்த்து
பூங்கொத்தாய்
மெருகூட்டுகிறது காதல்


எங்கேயோ பிறந்த
என்னை....உனில் சேர்த்து
பூங்கொத்தாய்
மெருகூட்டுகிறது காதல்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..