Wednesday 17 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-25

என் காதலை
உன்னிடம் கொடுத்து
நழுவிவிடாமல் இருக்க...
உன் கைகளை நான்
பிடித்துக் கொண்டேன்
என் ஆயுள்வரை இறுக்கமாய்...


உன் விழிகளில் உறங்கி
என் இமைகளில்
விழிக்கிறது
நம் பொழுதுகள் காதலாய்.


காத்திருப்புகளின்
கோபங்கள் எல்லாம்
சட்டென கரைந்துபோகிறது
வேக வேகமாய்
வேர்க்க விருவிருக்க
பயந்து பயந்து
பறந்து வரும் உன்னைப் பார்த்ததும்


உள்ளும் புறமும்
ஒளிவு மறைவில்லாமல்
கண்ணாடி மீனாகிறது
காதல் ..நம்மில்


அக்னிக் திராவகம்....
பூசிய குதிரையாய்
என்னில்..ஓடி..ஓடி
என் இரவுகளை ....
தகிக்கிறாயடி..காதலே....


உன் தோட்டமெங்கும்
பூக்களை வளர்த்து
வண்டினத்தை..வரவிடாமல்
மலரே ...ஏனடி.....
ம(ன)ணக்கதவை
அடைத்தாய்........?


மலர்ந்தும் மலராமல்
இதழ் குவித்து
தூண்டுகிறது..பருவம்
காதலை.....பூக்களால்


மின்னல்கள் ..மத்தாப்பாய்
தெறிக்க தெறிக்க.....
என்னுள் பவனி வருகிறாள்...
என் கனவு தேவதை.....
நாளும் காதலாய்...



இதழ் குவித்து
பறக்கும் முத்தம் தருகிறாய்
கனவே.....கையில்
பிடிப்பதற்க்குள்........
விடிந்துவிடுகிறது பொழுது....
என்னே என் அதிர்ஷ்டம்...???


உன் மார்பு மெத்தையில்
சுவாசச்சூட்டில்...நிம்மதியாய்
துயில் கொள்கிறோம்
நானும்..நம் காதலும்.....
இருவேறுகுழந்தைகளாய்....


உன் விழி மொழிகளுக்கு
பதில் சொல்ல முடியாமல்.....
வார்த்தைகளின்றி.........
பரிதவித்துக் கிடக்கிறேன்
பறவைகளுடன்,,,,,,,,


காதல் மேகமே
நீ அனுப்பும்
பறக்கும் முத்தங்களை
சிந்தாமல் சிதறாமல்
ஏந்திக்கொள்ள
இதழ் விரித்து
தவம் செய்கிறது
என் பூக்காடு....


எப்போழுதும்
யோசிக்காமல்..உன்னை
கோபமாய் பேசிவிட்டு....
பேசியதற்காய்
நான் அழுகிறேன்.........
தாயை அடித்து
தானாய் அழும்
குழந்தை போல..


இனி
நினைக்கவே கூடாது
என சபதம் எடுக்கும்
போது தான்
சத்தமில்லாமல் வந்து
வகிடு பிளந்து
நடு உச்சியில்
ஆணிஅறைந்து செல்கிறாய் ...காதலே


இதழ் குவித்து
நீ அருகில் வரும் வேளையில்
அதன் வரிப் பள்ளத்தில் விழுந்து விடுகிறது என் காதல்


உயிரின் வண்ணம்
ஊதா என்று
உன்னைப் பார்த்த பின்
அறிந்துகொண்டேனடி.


முகம் மறைக்கும்
முடிக்கற்றைகளை....
விலக்கிவிடும்
விரல் தீண்டலில்
கண்கள் மூடி
விழித்துக்கொள்கிறது... காதல்!!!!





கட்டியணைத்து
அடித்து...கடித்து
கொஞ்சி விளையாடுவதில்
காதலும் ..குழந்தையும்....
ஒன்றுதான்.....!!!


சின்ன சின்னதாய் தான்
இதழ் விரித்தாய்..நீ....
சொல்லவியலா கற்பனையில்
சொக்கிப்போய்...........
இதயம் பறிகொடுத்து
பரிதவிக்கிறேன் நான்


மனதில் ஆழமாய்
இருக்கும் உன்னை...
அழியும் மணலில்
எழுதி எழுதி
கண்ணீர் சிந்த வைக்கிறது
உன் பிரிவு...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..